ஸ்ரீநகர்: ஜம்மு நகரை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவு வான்வழி தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அதை இந்தியா முறியடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல். இருப்பினும் இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து 8 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. அதை முறியடித்துள்ளது இந்திய பாதுகாப்பு படை. பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய பாதுகாப்பு படை வான் பாதுகாப்பு தடுப்பு இயந்திரம் மூலம் சுட்டு வீழ்த்தி உள்ளதாக தகவல். இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவல்.