ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக சினார் படைப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்க 2–3 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் முயன்றதை அறிந்த துருப்புக்கள், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு ஊடுருவல்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதன் காரணமாக கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ராணுவம் அங்கு உஷார்படுத்தப்பட்டுள்ளது.