மதுரை: ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசோடு தொடர்புடையது என்று ஐகோர்ட் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரபட்டது. பீகார், ஆந்திரா, தெலுங்கானாவில் செய்தது போல் தமிழ்நாட்டிலும் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதே கோரிக்கை மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை
The post ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசோடு தொடர்புடையது: ஐகோர்ட் மதுரை கிளை கருத்து appeared first on Dinakaran.