டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினை எதிர்த்து அமலக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி 10 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஜாமினை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையை சேர்ந்த வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விடுப்பமா என கேட்டுத் தெரிவிக்க அவர் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த விசாரணையின் போது இன்று ஆஜரான செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி செந்தில்பாலாஜி அமைச்சராகவே தொடர்வார் என தெரிவித்தார். இது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து 10 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.