புதுடெல்லி: ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.
ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பர்ஹைட் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட போக்னாதி அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.