
கவுஹாத்தி: அசாம் பாடகர் ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்த விசாரணை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றிருந்தார். கடந்த செப்.19-ம் தேதி அங்கு கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அசாம் கொண்டுவரப்பட்டு கவுஹாத்தி அருகே சோனாபூர் என்ற இத்தில் செப்.23-ம் தேதி தகனம் செய்யப்பட்டது. ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்து குவாஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் மாநில அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

