சென்னை: பொதுத் துறை நிறுவனங்களுக்கு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய, மத்திய அரசின் ‘ஜெம் போர்ட்டலில்’ விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என, சிறு தொழில்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
மத்திய அரசின் பொதுகொள்முதல் கொள்கையின் கீழ், பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் ஆண்டு மொத்த கொள்முதலில் 25 சதவீதத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து கட்டாயம் வாங்க வேண்டும். இதில், 4 சதவீதம் எஸ்சி, எஸ்டி பிரிவு தொழில்முனைவோரிடம் இருந்தும், 3 சதவீதம் மகளிர் தலைமையில் செயல்படும் நிறுவனங்களிடம் இருந்தும் வாங்க வேண்டும்.