ஜெர்மனி: ஜெர்மனியில் லூப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ஃபிராங்க்பர்டிலிருந்து, சென்னை வரவேண்டிய விமானம், சென்னையிலிருந்து ஃபிராங்க்பர்ட் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஜெர்மன், அமெரிக்கா, லண்டன், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து செல்லும் 300க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் தவித்து வருகின்றனர்.சென்னையில் இருந்து பிராங்க் பர்ட் நகருக்கு, லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தினமும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஜெர்மனியில் லூப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்: விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.