ஜெர்மன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கூட்டணியின் தலைவரான ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் சோஷியல் ஜனநாயகக் கட்சியின் ஓலஃப் ஸ்கோல்ஸ் படுதோல்வியைத் தழுவியுள்ளார். ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றிக்கு ட்ரம்ப் பாணியில் சட்டவிரோத குடியேறிகள் மீது கடும் நடவடிக்கை என்று அவர் கொடுத்த வாக்குறுதி பெறும் பங்குவகித்ததாக தெரிகிறது.
ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சியில் அவரது கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்துவ சோஷியல் யூனியன் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் இணைந்து பெரும்பான்மை வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளன. வெற்றிக்குப் பின்னர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய மெர்ஸ், “ஜெர்மனியில் இனி மீண்டும் நம்பகத்தன்மை வாய்ந்த ஆட்சி நடைபெறும்” என்றார்.