சென்னை: உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டு பிரபலமாக உள்ள ஒவ்வொரு தேசத்தின் வீடுகளிலும் சச்சின் டெண்டுல்கர் எனும் வீரரின் பெயரை அறிந்திருப்பார்கள். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சினுக்கு இன்று பிறந்தநாள். 52-வது வயதை அவர் எட்டியுள்ளார்.
கிரிக்கெட்டில் களத்தில் ஓய்வு பெறும் வரை ரன் சேர்ப்பதில் பிஸியாக இருந்தவர். கடந்த 1989-ல் 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அதன் பின்னர் நடந்த அனைத்தும் சாதனை. அவரது ஆட்ட நேர்த்தி மற்றும் தான் நேசித்த விளையாட்டுக்காக வெளிக்காட்டிய அர்ப்பணிப்பு என எல்லாமும் இதில் அடங்கும்.