சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்றை ‘டாப் 2’ அணிகளில் ஒன்றாக நிறைவு செய்வதற்கான பொன்னான வாய்ப்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகளும் சீசனில் இருந்து வெளியேறிய அணிகளுடன் 13-வது லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.
பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன. இருப்பினும் ‘டாப் 2’ இடத்தில் எந்த அணி நிறைவு செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தொடர்கிறது. ஏனெனில், பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இரண்டு முறை கிடைக்கும்.