சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத் தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து தொடர்பான டெண்டர், மதுபான கூடத் துக்கு உரிமம் வழங்குவது ஆகிய வற்றில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாட்டில் தயா ரிக்கும் நிறுவனங்களே இதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் (தமிழ் நாடுமாநில வாணிபகழகம்)நிறுவனத் துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவதில் பல்வேறு முறை கேடுகள் நடைபெறுவதாகவும், இதில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரி வர்த்தனை நடந்துள்ளதாகவும் அம லாக்கத்துறைக்கு புகார் சென்றது.