சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில், ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தொடர்பு இடங்களில் சோதனை நடத்த EDக்கு அதிகாரம் இல்லை என்றும், சோதனை தொடர்பாக கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் .
The post டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறையின் மேல் நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை appeared first on Dinakaran.