புதுடெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனையில் நாட்டிலேயே உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிப்பதாக அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உ.பி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் யோகி பேசியது: “உத்தரப் பிரதேசம் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டவை யுபிஐ மூலம் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்திருப்பது, டிஜிட்டல் வங்கியின் எளிமையைப் பிரதிபலிக்கிறது.