மாடுகளில் பல வகை உண்டு. நிறம், கொம்பு, சுழி ஆகியவற்றைக் கொண்டு வகை பிரிப்பார்கள். பார்ப்பதற்கு ஒன்றுபோல் நமக்குத் தெரியும். ஆனால் அவற்றின் வித்தியாசங்கள் விவசாயிகள், மாடு வியாபாரிகளுக்கு அத்துப்படி. மாட்டு சுழிகளையே 10 வகையாகச் சொல்வார்கள்.
அதேபோல் மாட்டின் வயதையும் விவசாயிகள் சரியாகக் கணித்து விடுவார்கள். ‘பல்ப் போட்டுருச்சா?’ என்று கேட்பார்கள். இது மாட்டின் பிராயத்தைக் குறிப்பது. கீழ்வாயில் பால் பற்கள் உதிர்ந்து இரண்டு பற்கள் முளைக்கும். இதைத்தான் ‘பல்ப்’ என்றார்கள். வருஷத்துக்கு இரண்டு இரண்டு பற்கள் முளைக்கும். 4 வருடங்களில் 8 பற்கள் போட்டு விடும். இதை ‘கடைத்தேர்ச்சி’ அதாவது ‘கடைசி பல் போடுதல்’ என்பார்கள்.