கேப்டவுன்: ஐபிஎல் தொடரை போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 4-வது சீசன் வரும் டிசம்பர் 26-ல் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசனில் கிரஹாம் ஃபோர்டு நீக்கப்பட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜோனாதன் டிரோட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.