
சென்னை: சென்னையை தலைமையகமாக கொண்டு செயல்படும் டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகன நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் (எம்.டி.) மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) டார்ஸ்டன் ஸ்மித் (53) நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்போது தலைமை நிதி அதிகாரியாக உள்ள இவர், 2026-ல் தொடக்கத்தில் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். உலகின் மிகப்பெரிய வர்த்தக வாகன நிறுவனமான டெய்ம்லரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 1997-ம் ஆண்டில் டெய்ம்லர் டிரக் நிறுவனத்தில் டார்ஸ்டன் ஸ்மித் இணைந்தார். கடந்த 28 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

