
புதுடெல்லி: டெல்லியில் கடைகள், வணிக நிறுவனங்களில் பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்த அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண் பணியாளர்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான டெல்லி நகர அரசாங்கத்தின் திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இது தொடர்பாக டெல்லி அரசின் தொழிலாளர் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "டெல்லி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1954-ல் பெண்களை பணியில் அமர்த்துவது மற்றம் அவர்களின் பணி நிலைமைகள் தொடர்பாக இரண்டு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

