புதுடெல்லி: டெல்லியில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை நடுவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அம்மாநில முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லியில் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு பள்ளியிலும் ‘ஏக் பெட் மா கே நாம்’ திட்டத்தின் இரண்டாவது தொடரில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டெல்லியை பசுமையாக்கும் வகையில் நமது இயற்கை மற்றும் பூமி அன்னையின் பெயரில் ஒவ்வொரு நபரும், சமூக அமைப்பும் குறைந்தது ஒரு மரத்தையாவது நட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த பருவத்தில் 70 லட்சம் மரங்களை நடுவதற்கு நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதைச் செய்வதன் மூலம் டெல்லியின் சுற்றுச்சூழலை மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.