புதுடெல்லி: நெஞ்சு வலி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், இதயம் தொடர்பான நோய் காரணமாக மார்ச் 9, 2025 அன்று அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார். தற்போது, திருப்திகரமான முறையில் குணமடைந்ததை அடுத்து அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று (மார்ச் 12, 2025) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களுக்கு போதுமான அளவு ஓய்வு எடுக்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.