புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் குடியிருப்பு வளாகத்தில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்ற விவகாரம் தொடர்பாக காவல் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே. நெடும்பாரா தாக்கல் செய்த மனுவில், “மார்ச் 14 அன்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கொலீஜியத்தால் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவுக்கு அதிகார வரம்பு இல்லை. நாடாளுமன்றமோ அரசியலமைப்போ அதிகாரம் வழங்காத நிலையில், கொலீஜியம் தனக்கு அதிகார வரம்பை வழங்க முடியாது. எனவே, இத்தகைய விசாரணையை நடத்த மூவர் குழுவுக்கு அதிகாரம் வழங்கும் கொலீஜியத்தின் அறிவிப்பு ஆரம்பத்தில் இருந்தே செல்லாது.