புதுடெல்லி: டெல்லியில் உள்ள முஸ்தபாபாத் பகுதியில் இன்று காலையில் நடந்த கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பட்டியலை டெல்லி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அந்தப்பட்டியலின் படி, உயிரிழந்தவர்களில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் உரிமையாளரும் இருப்பது உறுதியாகியுள்ளது. உயிரிழந்த 11 பேரில் 8 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களில் மூன்று பேர் பெண்கள். நான்கு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.