சிதம்பரம்: “தமிழ்நாடு ஓரணியில் நிற்கும்போது, டெல்லி காவி அணியின் கனவுத் திட்டமும் பலிக்காது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று (ஜூலை 15) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காமராஜர் பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அர்ப்பணித்தவரான எல்.இளையபெருமாள் திருவுருவச் சிலையுடன் ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் கட்டிப்பட்டுள்ள நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.