டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் கூச்சலிட்டனர். இதனால் 21 எம்எல்ஏக்கள் 3 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், சட்டப்பேரவை வளாகத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி , நேற்று சட்டப்பேரவை வளாகத்துக்குள் நுழைய முயன்றார். ஆனால், அவரது கார் சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.