புதுடெல்லி: “தேர்தல் முடிவுகள் வெளியானதும் பாஜகவின் அனைத்து அத்துமீறல்களும் நின்றுவிடும்.” என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. அதற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியின் 70 பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டில் ஒன்று கூடினர். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை பாஜகவில் சேர்க்க முயற்சிக்கும் ஆபரேஷன் லோட்டஸ் புகார் எழுந்ததன் பின்னணியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.