சென்னை: டெல்லி மதராசி கேம்ப் இடிப்புக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது; ஆயிரக்கணக்கான தமிழர்கள் குடியிருப்புகளை இழந்து, வீதிகளில் தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 70 ஆண்டுக்கும் மேலாக வாழ்ந்த மக்கள், தங்களது உரிமை, இருப்பிடங்களை இழந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகிறது; பெண்கள் பாதுகாப்பின்றி நீர், மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவதாக அவர் தெரிவித்தார்.
The post டெல்லி மதராசி கேம்ப் இடிப்புக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம்!! appeared first on Dinakaran.