புதுடெல்லி: டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரிட்டன் சுற்றுலா பயணி ஒருவர் இரண்டு ஆண்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கட்டதாக போலீஸார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக பிரிட்டன் தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் இன்று (மார்ச் 13) கூறுகையில், “பிரிட்டன் பெண் சுற்றுலா பயணி கைலாஷ் என்ற நபருடன் சமூக ஊடகம் வாயிலாக நட்பில் இணைந்துள்ளார். அப்பெண் கோவாவில் இருந்து, கைலாஷைக் காண டெல்லி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கைலாஷுடன் சமூக ஊடகத்தில் நட்பாகி உள்ளார். பின்பு அவர்கள் அடிக்கடி உரையாடியுள்ளனர்.