புதுடெல்லி: உலகின் முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தனது ஷோரூமை நேற்று திறந்தது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்த ஷோரூமை திறந்து வைத்தார். இது இந்தியாவில் திறக்கப்பட்டுள்ள முதல் டெஸ்லா ஷோ ரூம் ஆகும்.
மும்பையை பொறுத்தவரை இந்தியாவின் நிதி மற்றும் வணிகத் தலைநகராக உள்ளது. மேலும், மும்பையில், உயர் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுடன், மேம்பட்ட இவி சார்ஜிங் கட்டமைப்பும் உள்ளது. ஏற்கெனவே மின்சார வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக மும்பை உள்ளது. எனவே, டெஸ்லா தனது இந்தியா வர்த்தகத் திட்டத்தின் முதல் கட்டமாக மும்பையை தேர்வு செய்துள்ளது.