சென்னை: இந்தியாவில் தயாரிப்புகளை மேற்கொள்ளக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்பிள் நிறுவனத்தை கண்டிப்புடன் அறிவுறுத்திய நிலையிலும் இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த தயாரிப்பாளர்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்த ஐபோன்களின் எண்ணிக்கை 2.04 கோடியை கடந்துள்ளது. இது, 2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத நிலவரம் மட்டுமே.
கடந்த 2024-ம் ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது இந்த ஐந்து மாதத்தில் ஐபோன் ஏற்றுமதி என்பது 57% அதிகம் என சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான கேனலிஸ் (ஓம்டியா) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.