பெங்களுரு: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட் டார். இதன்படி சராசரியாக தினமும் 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். இதற்கு முன்பு ஜோ பைடன் அதிபராக இருந்தபோது ஜனவரி 2020 – டிசம்பர் 2024) சராசரியாக தினமும் 3 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர்.