சென்னை: ‘எந்த நெருக்கடிக்கும் ஆளாகாமல் தகுதியான, நேர்மையான, ஊழல் கறைபடியாதவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 பல்கலைக்கழக சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் இசைவு தெரிவிக்க வகை செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய உயர்கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல். இத் தீர்ப்பின்படி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அரசே நியமிக்கலாம். அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தால், பதவி நீக்கமும் செய்யலாம். இப்போதும் ஆளுநரே வேந்தராக நீடிக்கிறார். ஆனால், துணைவேந்தர் நியமனத்தில் எந்த உரிமையும் இல்லை என்ற விநோதமான நிலை உருவாகியிருக்கிறது.