கோவை: தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் கோவையில் தினசரி வணிகம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், ஒரு லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு நினைத்த அளவுக்கு தங்க நகைகளை வாங்க முடியாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிரமப்படுகின்றனர்.