சென்னை: 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.5) பவுனுக்கு ரூ.760 உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது ஒரு பவுன் விலை ரூ.59 ஆயிரத்தை கடந்தது. பின்னர் சற்று குறைந்து, மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஜனவரி 22-ம் தேதி ரூ.60,200 ஆக இருந்தது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் எதிரொலியாக ரூ.62,320 ஆக உயர்ந்தது. 10 நாட்களில் பவுன் விலை ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தது. 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதே விலையே நீடித்தது.