தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு இலக்கை மிஞ்சி 1.95 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 12-ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வழக்கம்போல குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.