தஞ்சை: சரஸ்வதி மஹால் நூலகத்தை பராமரிக்க கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நூலகத்தின் பழுதடைந்த கட்டடங்களை பழமை மாறாமல் ரூ.12.50 கோடியில் மறுசீரமைக்கப்படும். வெண்ணாறு, வெட்டாறு பிரியக்கூடிய இடத்தில் ரூ.42 கோடியில் புதிய பாலம் அமைக்கப்படும். பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். பூதலூர் வட்டத்தில் உயர்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் மதகுகள் ரூ.15 கோடியில் மறுசீரமைக்கப்படும்
The post தஞ்சைக்கு புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.