
மதுரை: குற்றவியல் சட்டங்களை தனிப்பட்ட தகராறுகளை தீர்க்கும் கருவியாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என கருந்து தெரிவித்த உயர் நீதிமன்றம், பாலியல் புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் வழக்கறிஞர் சரவணன். இவர் மீது திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சரவணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

