புதுடெல்லி: தனியார் மருத்துவமனைகளில் அதிக விலைக்கு மருந்துகள் விற்கப்படுவதை தடுக்க மாநில அரசுகள் புதிய விதிகளை வரையறுத்து முறையாக அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
டெல்லியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் விஜய் பால் டால்மியா. இவரது மனைவி நீலம். இத்தம்பதியின் மகன் சித்தார்த் டால்மியா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீலத்துக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.