ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையின் 5-வது மாடி பால்கனியில் இருந்து கீழே குதிக்க முயன்ற பெண்ணை போக்குவரத்து போலீஸார் காப்பாற்றினர்.
திருவொற்றியூரைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், மன அழுத்தம் காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று காலை மருத்துவமனையின் 5-வது மாடி அறையின் வெளியே வந்த அப்பெண், பால்கனியில் இருந்து கீழே குதிக்க முயற்சி செய்துள்ளார்.