மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ராஜாஜி மருத்துவமனையில் தனிக் காவல்நிலையம் இருந்தும் அதில் பணியாற்றும் போலீஸார் பெரும்பாலானவர்கள் மாற்றுப்பணிக்கு வேறு இடங்களுக்கு சென்று விடுவதால், மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 3,500 உள் நோயாளிகள், 15 ஆயிரம் வெளி நோயாளிகள் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்.