ராமேசுவரம்: அரபிக்கடலில் மூழ்கிய லைபீரியா நாட்டு சரக்கு கப்பலிலிருந்து வெளியேறி தனுஷ்கோடி கரையில் ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணிகள் தொடங்கி உள்ளன.
கடந்த மாதம் கேரள மாநிலம், கொச்சி துறைமுகத்தில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் அரபிக் கடலில் மூழ்கியது. இந்த கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் அபாயகரமான ரசாயனங்கள், கால்சியம் கார்பைடு, டீசல், பர்னஸ் ஆயில் இருந்தது. கப்பல் மூழ்கிய கடந்த 2 வாரங்களில், கடல் நீரோட்டத்தில் கப்பலிலிருந்த சில பொருட்கள் கேரள மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியில் ஒதுங்கிய வண்ணம் இருந்தது.