சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பெரும் பூநாரை சரணாலயத்தின் 524 ஹெக்டேர் பரப்பு எல்லைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா கடந்த ஜூன் 5-ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில், தனுஷ்கோடியில் பெரும் பூநாரைகள் சரணாலயத்தை அறிவித்தார். இது 524.78 ஹெக்டேர் பரப்பு கொண்டது. இதன் எல்லைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.