நாகர்கோவில்: தமிழகத்தில் உள்ள ஒரே அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியான குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், மருத்துவ கல்லூரியின் அங்கீகாரமும் பறிபோவதற்கான ஆபத்து உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறில் முதலாவதாக தலைமை அரசு மருத்துவமனை இயங்கி வந்தது. பின்னர் குமரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் இயங்கியதை தொடர்ந்து, கோட்டாறில் இயங்கிய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் அரசு ஆயுர்வேத மருத்துவமனை துவங்கப்பட்டது. பின்னர் இங்கு புதிய கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டது.