சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் (செப். 4 மற்றும் 5) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செப். 2-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மழை பெய்துள்ளது. குறிப்பாக, வேலூரில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 6, 7-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.