சென்னை: தமிழகத்தில் உள்ள 2,961 யானைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வனத்துறை மற்றும் இந்திய வனவிலங்கு அறக்கட்டளை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் தமிழக யானை திருவிழா நிகழ்ச்சி சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று நிறைவடைந்தது. வனத்துறை அமைச்சர் பொன்முடி விழாவை தொடங்கிவைத்தார். இதில் யானை மற்றும் மனித மோதல் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட வனத்துறையினரை கவுரவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: