சென்னை: தமிழகத்தில் 'ஹைபிரிட்' முறையில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் காற்றாலையுடன், சூரியசக்தி மின்நிலையங்களையும் சேர்த்து அமைக்க உள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள் அமைக்கப்பட்டு நீண்டகாலம் ஆகிவிட்டதால், தற்போது அவற்றின் செயல்திறன் மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, பழைய காற்றாலைகளை அகற்றிவிட்டு அங்கு 'ஹைபிரிட்' முறையில், அதாவது, ஒரே இடத்தில் காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, ஏற்கனவே பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.