கோவை: தமிழகத்தில் கோடைகாலத்தில் மின் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது. சீரான முறையில் மின்சாரம் விநியோகிக் மின்வாரியம் தயாராக உள்ளது என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 1973 சுயஉதவிக் குழுக்களுக்கு, ரூ. 170 கோடி மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் சாதனைத் திட்டங்கள், மகளிரை மையப்படுத்தித்தான் இருக்கும்.