சென்னை: வரும் கோடைக்காலத்தில் தினசரி மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.
தமிழகம் முழுவதும் 2.5 கோடி வீடுகளுக்கான மின் இணைப்புகளும், 40 லட்சம் வணிகப் பயன்பாட்டு மின் இணைப்புகளும், 25லட்சம் விவசாய மின்இணைப்புகளும் உள்ளன. மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகள் காரணமாக மின்தேவை அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.