சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொடூரக் கொலைகள், கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர். கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகத் தோன்றினாலும் உண்மையில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. மேலும் முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும் போது தற்போதைய திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என அமைச்சர்கள் ஆதாரங்களுடன் நிரூப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலாகத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் மாலை 3.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம், கொலை, கொள்ளை சம்பவங்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட உள்ளது.
The post தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம்: காவல்துறையுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை appeared first on Dinakaran.