மதுரை: தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சதீஷ், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. தமிழகத்தில் கடந்த 1983-ல் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் வீடு வீடாக சாதி, பொருளாதாரம், மற்றும் கல்வி தொடர்பான விபரங்களை நூறு சதவீதம் சேகரித்து 1985-ல் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. தற்போது தமிழகத்தில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.