தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தேமுதிக சார்பில் உலக மகளிர் தினவிழா சென்னை கோயம்பேட்டில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார்.